Thursday, October 29, 2009

அமைதியான நதியினிலே

பாடல்: அமைதியான நதியினிலே ஓடும்
திரைப் படம்: ஆண்டவன் கட்டளை
பாடியவர்கள்: டி. எம். சௌந்தர ராஜன் - பீ.சுசீலா
இசை: எம். எஸ்.வீ.- டி.கே. ஆர்
வரிகள்: கண்ணதாசன்
நடித்தவர்கள்: சிவாஜி - தேவிகா

டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்..
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளம்கீற்றினிலே ஏ ஏ..ஏ ஏ...
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை இளம்கீற்றினிலே
தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது
தென்னை தனை சாய்த்து விடும்
புயலாக வரும் பொழுது

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே
ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை
கனிந்த மனம் வீழ்வதில்லை

டி.எம்.எஸ்: அமைதியான நதியினிலே ஓடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
டி.எம்.எஸ்: ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

சுசீலா: நாணலிலே காலெடுத்து
நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வ்
அந்த பெண்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது
நாணமென்னும் தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது

அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அந்தியில் மயங்கி சிடும்
காலையில் செழித்து விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்
அன்பு மொழி கேட்டு விட்டால்
துன்ப நிலை மாறி விடும்

இருவரும்: அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்
ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

No comments:

Post a Comment