Thursday, October 29, 2009

அத்தை மகனே போய் வரவா

பாடல்: அத்தை மகனே போய் வரவா
திரைப் படம்: பாத காணிக்கை
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: பி.சுசீலா
நடிகை: சாவித்திரி

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் நினைவைத் தந்து செல்லவா

உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் நினைவைத் தந்து செல்லவா
அத்தை மகனே போய் வரவா

மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா
மாலை இளம் தென்றல் தன்னை தூது விடவா
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா
முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா
நிலம் பார்த்து மெதுவாக உனை நாடவா
உனை நாடி உனை நாடி ....
உனை நாடி உனை நாடி உறவாடவா

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா

1 comment: