Thursday, October 29, 2009

அரும்பாகி மொட்டாகி பூவாகி

படம் : எங்க ஊரு காவக்காரன்
குரல் : தீபன் சக்ரவர்த்தி, சுசீலா
இசை : இளையராஜா
நடிகர்கள் : ராமராஜன், கௌதமி

அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தைக் காட்டு..
கையிரண்டு சேர்த்து

(அரும்பாகி)

ஜாதகத்தைப் பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்
மணக்கும் சந்தனம் பூசட்டுமா
இனிக்கும் சங்கதி பேசட்டுமா
எதுக்கும் உஙப்பனை கேக்கட்டுமா
அப்புறாம் உன் கிட்ட பேசட்டுமா
பொன் ஆவாரம்பூ என் காதோரமா
ஸ்வரம் பாடும் இன்னேரம் பொன்னேரம்தான்

(அரும்பாகி)

பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வாடி புள்ள
பல கதைய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள
பசிக்குப் பந்தியப் போடட்டுமா
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா
தவிச்சு நிதமும் கேக்கட்டுமா
புடிச்சுக் கையில சேக்கட்டுமா
எம் மச்சானுக்கு அட.. என்னாச்சுது
அது பூவாயி பின்னால பித்தானது

(அரும்பாகி)


No comments:

Post a Comment