Thursday, October 29, 2009

அத்திக்காய் காய் காய்

பாடல்: அத்திக்காய் காய் காய்
திரைப் படம்: பலே பாண்டியா
இசை: விஸ்வனாதன் -ராமமூர்த்தி
பாடியவர்கள்: டி. எம்.சௌந்தர ராஜன்,
பீ.சுசீலா, பீ.பீ.ஸ்ர்னிவாஸ், ஜமுனா ராணி
வரிகள்: கண்ணதாசன்
நடித்தவர்கள்: சிவாஜி, தேவிகா, பாலாஜி

சுசீலா: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ
என்னைப் போல் பெண்ணல்லவோ

டி.எம்.எஸ்: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓ

கன்னிக் காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய்
மங்கை எந்தன் கோவைக்காய்
டி.எம்.எஸ்: மாதுளங் காய்
ஆனாலும் என்னுளம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
சுசீலா: இத்திக்காய்
காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ
ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ..ஆஆஆஆஆஆஆஆ

டி.எம்.எஸ்: இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்
சுசீலா: உருவம் காய் ஆனாலும்
பருவம் காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இருவரும்: ஆத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ

பீ.பீ.எஸ், ஜமுனா: ஆஹ ஹாஆஅ

ஜமுனா: ஏலக்காய் வாசனை போல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் கேட்டது போல் ட்
ஹனிமை இன்பம் கனியக்காய்
ஏலக்காய் வாசனை போல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் கேட்டது போல்
தனிமை இன்பம் கனியக்காய்
பீ.பீ.எஸ்: சொன்னதெல்லாம்
விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

இருவரும்: அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னுயிரும் நீயல்லவோ
ஆஹா ஹாஹா ஹா ஆஆஆஆ

பீ.பீ.எஸ்: உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே சிரித்தாயோ
உள்ளமெலாம் மிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைத்தாயோ
வெள்ளரிக்காய் பிளந்ததுபோல்
வெண்ணிலவே சிரித்தாயோ
ஜமுனா: கோதை எனைக் காயாதே
கொற்றவரங்காய் வெண்ணிலா
பீ.பீ.எஸ்: இருவரையும் காயாதே
தனிமையிலேங்காய் வெண்ணிலா

அனைவரும்: ஆத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
ஆஹ ஹாஆ ஓஹோ ஹோ ஹோ...


No comments:

Post a Comment