Sunday, March 25, 2012

வெள்ளி நிலா முற்றத்திலே

V''


திரைப்படம் - வேட்டைக்காரன்

வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய

முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய

நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

V''


படம் : பதிபக்தி (1958)
பாடியவர் :
வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை :


வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே
நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே
தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு
சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

அன்று ஆடு மேய்த்த பெண்கள் இன்று
அருமையான பருவம் கொண்டு
அன்புமீறி ஆடிப்பாட காணலாம் - பலர்
ஜோடியாக மாறினாலும் மாறலாம் - சிலர்
தாடிக்கார ஞானிபோலும் வாழலாம்
நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே
பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே
விட்டுப்போனபோது அழுதவள்ளி
புதுமையான நிலையில் - அல்லி
பூவைப்போல அழகை அள்ளிப் போடலாம் - தொட்டுத்

தேனைப் போலப் பேசினாலும் பேசலாம் - கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்

(வீடு)

விண்ணோடும் முகிலோடும் விளையாடும்...

V''


படம் : புதையல்
குரல் : சி.எஸ்.ஜெயராமன்+சுசீலா
பாடல் : மாயவநாதன்
இசை : வி-ரா
நடிகர்கள்: சிவாஜி+பத்மினி

விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....

(விண்ணோடும்)

அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி.... இசைபாடி...
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
ஓடோடி வந்த
சொர்க்க போகமே

காணத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

சங்கீதத் தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே

மங்காத தங்கம் இது
மாறாத வைரம் இது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

வாழ நினைத்தால் வாழலாம்

V''


வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

(வாழ)

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

(வாழ)

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

(வாழ)

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்

(வாழ)

வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா

V''


படம் : காத்திருந்த கண்கள்
குரல் : பி.பி.ஸ்ரீனிவாஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை :
நடிகர்கள் : ஜெமினி, சாவித்திரி


வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா - அவள்
வடித்து வைத்த ஓவியத்தைப் பாரடா கண்ணா
குடும்பக் கலை போதும் என்று கூறடா கண்ணா - அதில்
கூட இந்தக் கலைகள் வேறு ஏனடா கண்ணா ?

காதல் சொன்ன பெண்ணை இன்று காணமே கண்ணா
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா - தாலி
கட்டியவள் மாறி விட்டாள் ஏனடா கண்ணா
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அந்தக்
காதலிதான் மனைவி என்று கூறடா கண்ணா - அன்று
கண்ணை மூடிக் கொண்டிருந்தார் ஏனடா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்
கூறடா கண்ணா - அவள்
தேவை என்ன ஆசை என்ன
கேளடா கண்ணா
நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல
முடியுமா கண்ணா - அதை
நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா

மனதில் அன்றே எழுதி வைத்தேன் தெரியுமா கண்ணா
அதை மறுபடியும் எழுதச் சொன்னால் முடியுமா கண்ணா

இன்று வரை நடந்ததெல்லாம் போகட்டும் கண்ணா - இனி
என்னிடத்தில் கோபமின்றி வாழச் சொல் கண்ணா
அவரில்லாமல் எனக்கு வேறு யாரடா கண்ணா - நான்
அடைக்கலமாய் வந்தவள்தான் கூறடா கண்ணா

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்

Y''


படம் : பறக்கும் பாவை
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சரோஜாதேவி

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்

(யாரை)

வேட்டை ஆடும் மானானேன்
வித்தை காட்டும் பொருளானேன்
காட்டில் வாழும் கிளியாகாமல்
நாட்டில் வாழும் பெண்ணானேன்
அன்னை பெற்றாள் பெண் என்று
அதனால்தானே துயர் இன்று
கண்ணைத் தந்த தெய்வங்களே
கருணை தந்தால் ஆகாதோ
ஓ......ஒ.....

(யாரை)

அழகைக் காட்டும் கண்ணாடி
மனதைக் காட்டக் கூடாதோ
பழகும்போதே நன்மை தீமை
பார்த்துச் சொல்லக் கூடாதோ
வாழ்த்தும் கையில் வாளுண்டு
போற்றும் மொழியில் விஷமுண்டு
வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா
மனிதர் இங்கே எவருண்டு
ஆ,,,,,,ஆ,,,,,,,,,,,

(யாரை)

மேகத்தைத் தூது விட்டா

M''


படம் : அச்சமில்லை அச்சமில்லை
குரல் : மலேஷியா வாசுதேவன், சுசீலா
பாடல் : வைரமுத்து
இசை : வி.எஸ். நரசிம்மன்
நடிகர்கள் : ராஜேஷ், சரிதா

சுசீலா :
மேகத்தைத் தூது விட்டா
திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே..
தண்ணிய நான் தூது விட்டேன்
தண்ணிக்கு இந்தக் கன்னி
தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம
எப்ப வந்து தரப்போற ?
எப்ப வந்து தரப்போற ?

ஓடுகிற தண்ணியிலே...
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ...?

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே

மலேஷியா வாசுதேவன்:
அடி கிராமத்துக் கிளியே - என்
கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு
கொடை புடிக்க வா மயிலே

சுசீலா :
கொடையுமில்ல படையுமில்ல
கூதலுக்கு ஆதரவா
தாவணிய நீ புழிய
தலை துவட்ட நான் வரவா ?

மலேஷியா வாசுதேவன்:
நீ நனச்ச ஆடையெல்லாம்
நீ புழிஞ்சா நீர் வடியும்
அயித்த மகன் நான் புழிஞ்சா
அத்தனையும் தேன் வடியும்

சுசீலா :
ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

மலைத் தோட்டத்து குயிலு
இது உமக்காகப் பாடுதுங்க
ஆசையை நான் தூது விட
அருவி ஒரு பாலமுங்க

மலேஷியா வாசுதேவன்:
அருவி போல அழுகிறேனே
அறிந்து கொண்டால் ஆகாதோ
முந்தானையின் ஓரம் என்னை
முடிந்து கொண்டால் தாளாதோ

சுசீலா :
வக்கணையா தாலி வாங்கி
வாசலுக்கு வாரதெப்போ - ஒங்க
பாதம் பட்ட மண்ணெடுத்து நான்
பல்லு வெளக்கப் போறதெப்போ

ஓடுகிற தண்ணியிலே
ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் நெத்தியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி
ஓட விட்டேன் தண்ணியிலே
சேந்திச்சோ சேரலையோ
செவத்த மச்சான் கைகளிலே