Thursday, October 29, 2009

அழைக்காதே

பாடல்: அழைக்காதே
திரைப் படம்: மணாளனே மங்கையின் பாக்கியம்
பாடியவர்: பி.சுசீலா மற்றும் குழுவினர்
இசை: ஆதி நாராயண ராவ்
வரிகள்: டி.என்.ராமைய்யா தாஸ்
நடிகை: அஞ்சலி தேவி

ஆஆஆஆஆஆஅ
குழுவினர்: ஆஆஆஆஆஆஆ
சுசீலா: அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்

அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சுசீலா: எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: இகமதில் நானே பிரிந்திடுவேனா
எனை மறந்தாடிட சமயமிதானா
எனை மறந்தாடிட சமயமிதானா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

சுசீலா: கதலினாலே கானத்தினாலே
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: காவலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் என்னாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே
குழுவினர்: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ


No comments:

Post a Comment