Thursday, October 29, 2009

அன்று ஊமைப் பெண்ணல்லோ

பாடல்: அன்று ஊமைப் பெண்ணல்லோ
திரைப் படம்: பார்த்தால் பசி தீரும்
பாடியவர்: பி.சுசீலா - ஏ.எல்.ராகவன்
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி

சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ
அன்று ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
அய்யா உன்னைக் கண்டு தமிழ் பாடும் பெண்ணல்லோ

மணிப் புறாவும் மாடப் புறாவும் மனசில் பேசும்
பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ
மணிப் புறாவும் மாடப் புறாவும் மனசில் பேசும்
பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ

ராகவன்: ஓஓஓஓஓ
ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ
ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ

ஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஹோய்
வண்ணத் தமிழ் சேலை கட்டிக் கொண்டல்லோ
சுசீலா: கட்டிக் கொண்ட ஆடை ஒட்டிக் கொண்டல்லோ
ராகவன்: கொஞ்சும் தமிழ் வார்த்தை நெஞ்சில் வந்தல்லோ
சுசீலா: நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இன்றல்லோ
இருவரும்: நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இந்த நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
நெஞ்சம் ஒன்று சேரும் நேரம் இந்த நேரம்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

சுசீலா: மணிப் புறாவும் மாடப் புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ
ராகவன்: ஓஓஓஓஓ
ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹொ ஹோ

ராகவன்: ஓஓஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓ ஹோய்
காட்டில் வந்த வேடன் மானைக் கண்டல்லோ ஹோய்
சுசீலா: மானைக் கண்ட வேளை மயக்கம் கொண்டல்லோ ஓ
ராகவன்: இங்கே வந்த காதல் அங்கே வந்தல்லோ
சுசீலா: அங்கும் இங்கும் காதல் தூது சென்றல்லோ
இருவரும்: தூது சென்ற காதல் பாடி வந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ
தூது சென்ற காதல் பாடி வந்த பாடல்
சொந்தம் தந்ததாலே இன்பம் வந்தல்லோ

சுசீலா: மணிப் புறாவும் மாடப் புறாவும் மனசில் பேசும் பேச்சல்லோ
மங்கை நானும் தன்னந்தனியே மனசில் பாடிய பாட்டல்லோ
ராகவன்: ஓஓஓஓஓ
ஊமைப் பெண்ணல்லோ
இன்று பேசும் பெண்ணல்லோ
நெஞ்சில் ஆசை கொண்டே தமிழ் பாடும் கண்ணல்லோ ஹொ ஹோ

இருவரும்: ஓஓஓஓஓஓஓஓஓஓ
ஓஹொஹோ ஹோய்


No comments:

Post a Comment