Thursday, October 29, 2009

அல்லித் தண்டு காலெடுத்து

பாடல்: அல்லித் தண்டு காலெடுத்து
திரைப் படம்: காக்கும் கரங்கள்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் -பீ.சுசீலா
இசை: கே.வீ.மஹாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
நடிஅகர்கள்: எஸ்.எஸ்.ராஜேந்திரன் - விஜயகுமாரி

சுசீலா: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

டி.எம்.எஸ்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

பொல்லாத சிரிப்பும்
பொன் மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

பொல்லாத சிரிப்பும்
பொன் மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்
முத்து நவரத்தினங்களை
அவன் மோகனப் புன்னகை வெல்லும்
முத்து நவரத்தினங்களை
அவன் மோகனப் புன்னகை வெல்லும்

டி.எம்.எஸ்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

சுசீலா: நீரோடை போலே நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ
ஊராரின் கண் படலாமோ

நீரோடை போலே நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ
ஊராரின் கண் படலாமோ
அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருப்பேனோ
அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருப்பேனோ

இருவரும்: அல்லித் தண்டு காலெடுத்து
அடி மேலடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்ய்யும்?

No comments:

Post a Comment