Thursday, October 29, 2009

ஆயிரம் நிலவே வா

பாடல்: ஆயிரம் நிலவே வா
திரைப் படம்: அடிமைப் பெண்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா
இசை: கே.வி.மஹாதேவன்
வரிகள்: புலமைப் பித்தன்
நடிப்பு: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா

எஸ்.பி.பி: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

எஸ்.பி.பி: நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடை தளர்ந்து போனதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ
என் உயிரிலே உன்னை எழுத பொன் மேனி தாராயோ
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

சுசீலா: மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
இன்ப மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட
இருவரும்: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

எஸ்;பி.பி: அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெறும்
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ
சுசீலா: இன்பம் இதுவோ
எஸ்.பி.பி: இன்னும் எதுவோ
இருவரும்: தந்தாலும் ஆகாதோ

ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட
இருவரும்: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா

எஸ்.பி.பி: பொய்கை எனும் நீர்மகளும் போவாடை போர்த்திருந்தாள்
சுசீலா: தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
எஸ்.பி.பி: ஆஆஆஆஆஆஆஆ
எஸ்.பி.பி: பொய்கை எனும் நீர்மகளும் போவாடை போர்த்திருந்தாள்
சுசீலா: ஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
எஸ்.பி.பி: என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணர மாட்டாயோ
சுசீலா: அந்த நிலையில்
எஸ்.பி.பி: தந்த சுகத்தை
இருவரும்: நான் உணரக் காட்டாயோ

இருவரும்: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழொரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட
இருவரும்: ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா


No comments:

Post a Comment