Thursday, October 29, 2009

அ ; ஆடை கட்டி வந்த நிலவோ

பாடல்: ஆடை கட்டி வந்த நிலவோ
திரைப் படம்: அமுதவல்லி
பாடியவர்கள்: டி.ஆர்.மஹாலிங்கம் - பீ.சுசீலா

மஹாலிங்கம்: ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
இவள் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

சுசீலா: துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை
எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளை தான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கலாந்தனந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே

துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

மஹாலிங்கம்: அந்தி வெய்யில் நிறத்தவளோ
குலுங்கும் அல்லி மலர் இனத்தவளோ
உந்தி உந்தி விழும் நீரலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ

சுசீலா: ஆஹா..ம்ம்..லாலா..
அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
மஹாலிங்கம்: அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
சுசீலா: வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மஹாலிங்கம்: மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை

இருவரும்: இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
மஹாலிங்கம்: நன் நேரமிதே
சுசீலா: மனம் மீறிடுதே
இருவரும்: நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மனம் மாளிகை ஓரம் ஆடிடுவோம்

மஹாலிங்கம்: ஆஆஆஆ
சுசீலா: ஆஆஆஆஆ
இருவரும்: ஆஆஆ
மஹாலிங்கம்: ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

முகில் ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ


No comments:

Post a Comment