Thursday, October 29, 2009

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா

பாடல்: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா
திரைப் படம்: எதிர் நீச்சல்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.ஸௌந்திர ராஜன்
இசை: வி.குமார்
நடிகை: சௌகார் ஜானகி, ஸ்ரீகாந்த்

சுசீலா: ஏன்னா, நீங்க சமர்த்தா?
நீங்க அசடா?
சமர்த்தா இருந்தா கொடுப்பேளாம்
அசடா இருந்தா பறிப்பேளாம்
டி.எம்.எஸ்: ஏண்டி, புதுசா கேக்குறே என்னைப் பார்த்து?

சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா? ஏன்னா?
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேந்துக்கறா
அடிச்சதுக்கொண்ணு புடிச்சதுக்கொண்ணு
பொடவையா வாங்கிக்கறா
பட்டு பொடவையா வாங்கிக்கறா

அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

டி.எம்.எஸ்: அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி
வாங்கறாண்டி..பட்டு
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
அவன் சம்பளம் பாதி கிம்பளம் பாதி வாங்கறாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
மூன்றெழுத்து மூணு ஷோவும் பார்த்தது நீ தாண்டி
சினிமாவுக்கே சம்பளம் போனா புடவைக்கு ஏதடி?
பட்டு புடவைக்கு ஏதடி?
அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?

சுசீலா: உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு
என்னத்தைக் கண்டா பட்டு?
உங்களுக்குன்னு வாழ்க்கைப் பட்டு என்னத்தைக்
கண்டா பட்டு?
டி.எம்.எஸ்: பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
பட்டு கிட்டு பேரைச் சொல்ல பொறந்திருக்கே ஒரு லட்டு
சுசீலா: நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை
நட்டுண்டா நேக்கு?
நாளும் கிழமையும் போட்டுக்க ஒரு நகை நட்டுண்டா நேக்கு?
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
எட்டுக் கல்லு பேசரி போட்ட எடுப்பா இருக்கும் மூக்கு
டி.எம்.எஸ்: சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும்
தெரியாதோடி நோக்கு?
சட்டியிலே இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோடி நோக்கு?
சுசீலா: எப்பொ இருந்தது இப்போ வரதுக்கு
எதுக்கெடுத்தாலும் சாக்கு உம் உம்
அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?

டி.எம்.எஸ்: ஏட்டிக்குப் போட்டி பேசாதேடி பட்டு
சுசீலா: பேசினா என்ன வெப்பேளா ஒரு குட்டு?
டி.எம்.எஸ்: ஆத்திரம் வந்தா பொல்லாதவண்டி கிட்டு
சுசீலா: என்னத்தை செய்வேள்?
டி.எம்.எஸ்:சொன்னத்தை செய்வேன்
சுசீலா: வேறென்ன செய்வேள்?
டி.எம்.எஸ்: அடக்கி வெப்பேன்
சுசீலா: அதுக்கும் மேலே?
டி.எம்.எஸ்: ம்ம்ம் பல்லை உடைப்பேன்
சுசீலா: அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா?
அவ ஆத்துக்காரர் கொஞ்சுறதைக் கேட்டேளா?
டி.எம்.எஸ்: பட்டு, அடுத்தாத்து சங்கதி எல்லாம் நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?
பட்டு நமக்கேண்டி?


No comments:

Post a Comment