Sunday, March 25, 2012

பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி

P''


படம் : துலாபாரம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : ஜி.தேவராஜன்
நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா

பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

(பூஞ்சிட்டு)

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

No comments:

Post a Comment